சிவகாசி அருகே அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்: 2பேர் கைது

சிவகாசி அருகே அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-19 12:16 GMT
சோதனை செய்த அதிகாரிகள்

விருதுநகர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் தொடர் வெடி விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.வெடி விபத்துக்களை தவிர்க்கும் வகையில் ஆட்சியர் ஜெயசீலன் ஆலோசனை பேரில் நான்கு சிறப்பு தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் மாவட்டம் முழுவதிலும் உள்ள பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளில் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.சிவகாசி அருகே அனுப்பன்குளம் பகுதியில் வருவாய் ஆய்வாளர் விக்னேஸ்வரன்,விஏஓ காளியப்பன் ரோந்து பணியில் ஈடுபடும் போது ராமலிங்காபுரத்தில் பட்டாசு கடையில் அனுமதியின்றி தகர செட் அமைத்து பேன்சி ரக பட்டாசுகள் 524 பேன்சி ரக பட்டாசுகள் சட்டவிரோதமாக பதுக்கி இருந்தன.

இது குறித்து வருவாய் ஆய்வாளர் விக்னேஸ்வரன் உயர் அதிகாரிளுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து இரண்டு அறைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைக்க முயன்ற போது சக்திவேல் என்பவரும் மற்றும் இவரது நண்பரும் சேர்ந்து அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இது குறித்து வாருவாய் ஆய்வாளர் விக்னேஷ்வரன் சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News