தெரு நாய்கள் கடித்து மான் உயிரிழப்பு

அரூர் அருகே தண்ணீர் தேடி கிராமத்திற்குள் வந்த மானை, தெரு நாய்கள் கடித்ததால் உயிரிழந்தது.

Update: 2024-05-21 01:38 GMT

அரூர் அருகே தண்ணீர் தேடி கிராமத்திற்குள் வந்த மானை, தெரு நாய்கள் கடித்ததால் உயிரிழந்தது.

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வனச்சரக்கத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன சமீப காலமாக தண்ணீர் தேடி மான், கடமான், காட்டுப்பன்றிகள், கீரிப்புலி, உள்ளிட்ட வன விலங்குகள் வன சருகத்தை ஒட்டியுள்ள கிராம பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கமாக உள்ளது

இந்த நிலையில். அரூர் வட்டத்துக்குட்பட்ட கோவிந்தசாமி நகர் கோல்டன்சிட்டி பகுதியையொட்டி கொளகம்பட்டி காப்பு காடு உள்ளது. வனப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீர் தேடி அவ்வப்போது மான்கள் குடியிருப்பு பகுதிக்கு வருகிறது. இவ்வாறு தண்ணீர் தேடி வந்த மானை தெருநாய்கள் துரத்தி கடித்ததில் மான் செத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மானின் உடலை மீட்டு உடலை புதைத்தனர்.

Tags:    

Similar News