துறையூர் அருகே தெரு நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு
துறையூா் அருகே தெருநாய்கள் கடித்ததில் காயமடைந்த மான் உயிரிழந்தது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-08 10:26 GMT

உயிரிழந்த மான்
வனப்பகுதியிலிருந்து துறையூா் ஒன்றியம், மருக்கலாம்பட்டி கிராமத்துக்கு தண்ணீா் தேடி வெள்ளிக்கிழமை சென்ற மானை அங்கு சுற்றித் திரிந்த தெருநாய்கள் துரத்தி கடித்தது. இதில் காயமடைந்த மான் அங்கேயே உயிரிழந்தது. தகவலறிந்து சென்ற திருச்சி வனத்துறையினா்மானின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வு செய்து வனப் பகுதியில் புதைத்தனா்.