திருவையாறு அருகே திருப்பழனத்தில் மீட்கப்பட்ட மான்

திருவையாறு அருகே திருப்பழனத்தில் நேற்று மீட்கப்பட்ட மான்.

Update: 2024-04-15 07:05 GMT

 மீட்கப்பட்ட மான்

திருவையாறு அருகே திருப்பழனத்தில் சனிக்கிழமை மீட்கப்பட்ட மான். திருவையாறு அருகே திருப்பழனம் ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே தனியாருக்குச் சொந்தமான இடத்தில் சனிக்கிழமை மான் மேய்ந்து கொண்டிருந்தது. அரியலூா், பெரம்பலூா் வனப் பகுதியிலிருந்து கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீா் அல்லது தீவனம் தேடி கொள்ளிடம் வழியாக இப்பகுதிக்கு வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தகவலறிந்த வனச் சரக அலுவலா் ரஞ்சித் அறிவுறுத்தலின்படி, திருவையாறு வனவா் திருஞானசம்பந்தம் மற்றும் வனத் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று மானை மீட்டு பாதுகாப்பாக வனத்துறையில் விடும் பணியில் ஈடுபட்டனா்.
Tags:    

Similar News