கலைஞர் குறித்து அவதூறு : சீமான் மீது எஸ்.பி. அலுவலகத்தில் திமுக புகார்|

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யிடம் திமுக வழக்கறிஞர் அணியின்ர் புகார் அளித்தனர்.

Update: 2024-07-15 07:13 GMT

வழக்கறிஞர் அணியினர் புகார்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்மீதுv மாவட்ட எஸ்.பி.யிடம் திமுக வழக்கறிஞர் அணியினர் புகார் அளித்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திமுகவினர் புகார் மனு அளித்தனர். இந்நிகழ்வில், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் குபேரன், மாநகர துணை அமைப்பாளர் ரூபராஜா, வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News