காவிரி நீர் தராததை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-21 06:05 GMT

ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் எஸ். குமார், டி. ரெத்தினசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். சங்கத்தின் தேசியக் குழு உறுப்பினர் மு. மாதவன், மாவட்டப் பொறுப்பாளர் த. செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலர் ஏ. ராஜேந்திரன், ஒன்றியச் செயலர் ஆர். ராதாகிருஷ்ணன், கல்லணைக் கால்வாய் பாசன சங்கத் தலை கொக்குமடை ரமேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினர்.பேசினர். தமிழகத்துக்கான காவிரி நீரை கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தர காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழு காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Tags:    

Similar News