குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம்

மகளிர் உரிமைத்தொகை குறித்து இழிவாக பேசிய குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்து, திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் உருவ பொம்மையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-03-14 06:34 GMT

மகளிர் உரிமைத்தொகை குறித்து இழிவாக பேசிய குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்து, திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் உருவ பொம்மையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பற்றி இழிவாக பேசிய பாஜக தேசிய மகளிர் ஆணைய‌ உறுப்பினர் குஷ்பூவின் பேச்சு சர்ச்சைக்கு உள்ளானது. குஷ்புவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டில் பல இடங்களில் திமுக மகளிர் அணியினர் குஷ்புவின் உருவ பொம்மையை எரித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மகளிர் உரிமைத்தொகைஇதன் ஒரு பகுதியாக புதன்கிழமை மாலை 6:00 மணி அளவில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மகளிர் அணி மற்றும் மாநகர மகளிர் அணி சார்பில் மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சகாய மேரி தலைமையில் திண்டுக்கல் மாநகரச் செயலாளர் ராஜப்பா மற்றும் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட மகளிர் அணி நிர்வாகிகள் குஷ்புவின் உருவ பொம்மையை எரித்தும் கண்டன கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags:    

Similar News