சாலை பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பூதப்பாண்டியில் சாலை பணியை தீவிரப்படுத்துமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-03-06 03:31 GMT

 பூதப்பாண்டியில் சாலை பணியை தீவிரப்படுத்துமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

. குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ளதெள்ளாந்தி நாராயணசாமி கோவில் தெருவில் அலங்கார தரை கற்கள் பதிக்கும் பணிக்கு டெண்டர் விட்டு பல மாதங்கள் ஆகியும் பணி தொடங்காமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.  இது தொடர்பாக  அதிகாரிகளிடம் பலமுறை நேரில் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, பூதப்பாண்டியிலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.         ஆர்ப்பாட்டத்திற்கு ஐயா வழி கோவில் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். பா ஜ க வழக்கறிஞர் ரஜினிகாந்த் , வி.ஹச்.பி  மாநில பொறுப்பாளர் காளியப்பன் ,மாவட்ட பொறுப்பாளர் ராஜா ,பாஜக மாவட்ட பொறுப்பாளர் சொக்கலிங்கம், ஒன்றிய தலைவர்கள்  கிருஷ்ணன், மாதவன் பிள்ளை மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
Tags:    

Similar News