இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-25 06:49 GMT

ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் ஜி.ஆர்.எம் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா அன்று பள்ளிக்கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சியின் போது மாணவிகளை ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கம் எழுப்ப கூறியுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிற மத மாணவிகள் பயின்று வரும் நிலையில் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம் எழுப்ப சொல்லிய பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏராளமானோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News