தொடக்க கல்வி ஆசிரியர்களின் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை சார்பாக ஆர்ப்பாட்டம்
தொடக்க கல்வி ஆசிரியர்களின் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை சார்பாக ஆர்ப்பாட்டம்
Update: 2024-07-04 11:03 GMT
ஆர்ப்பாட்டம்
தர்மபுரி அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு தமிழக அரசு கொண்டுவந்துள்ள 243 அரசாணையை ரத்து செய்ய வேண்டும் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர்களின் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு மாநிலம் தழுவிய பணி மாறுதலை அமல்படுத்தி இன்று பணி மாறுதலுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது அதனை கண்டிக்கும் வகையில் தமிழக முழுவதும் மறியல் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது அதன் அடிப்படையில் இன்று தர்மபுரியில் 243 அரசாணையை தமிழக அரசு ரத்து செய்து பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என தர்மபுரி அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர்களின் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி 243 அரசனையை ரத்து செய்ய வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.