பூச்சிக்கொல்லி மருந்து ஆலையை மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் !

தனியார் பூச்சிக் கொல்லி ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

Update: 2024-03-13 12:08 GMT

ஆர்ப்பாட்டம்


கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி மண்மலை ஊராட்சி மொடக்குப்பட்டியில், தனியார் பூச்சிக் கொல்லி ஆலை கட்டப்பட்டுள்ளது. அந்த ஆலையை மூடக் கோரி, அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே மண்மலை, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி பகுதி விவசாயிகள், மக்கள், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பூச்சிக்கொல்லி மருந்து கோரி ஆலையை மூடக்கோரி கோஷம் எழுப்பினர்.
Tags:    

Similar News