மதுபான ஆலையை மூடக்கோரி தேதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய தேமுதிகவினர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

Update: 2024-07-08 05:37 GMT

 ஆர்ப்பாட்டம்

தேமுதிக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் நகரச் செயலாளர் பரஞ்சோதி தலைமையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டை கடைவீதியில் கல்லக்கோட்டையில் இயங்கி வரும் மதுபான ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தேமுதிகவினர் காவல்துறையினர் கைது செய்தனர்.தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய தேமுதிகவினர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News