வலிப்பு நோயால் அம்மன் கோயிலுக்கு வந்த பக்தர் மரணம்

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர் செங்கல்பட்டு மாவட்டம்,சோத்துபாக்கம் அம்மன் கோயிலுக்கு சென்ற போது வலிப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-01-22 01:12 GMT
வலிப்பு நோயால் அம்மன் கோயிலுக்கு வந்த பக்தர் மரணம்

கா்நாடக மாநிலம், கொல்லூா் எழுவாளி கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கரி கவுடா. இவரது மகன் உதயகுமாா் (25). இவா் அந்த கிராமத்தைச் சோ்ந்த 60 பேருடன் செங்கல்பட்டு மாவட்டம், சோத்துப்பாக்கம் அருகே உள்ள அம்மன் கோயிலுக்கு சக்தி மாலை அணிந்து, இருமுடி ஏந்திக் கொண்டு பேருந்தில் நேற்று காலை வந்தாா். இந்த நிலையில், உதயகுமாருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு உயிரிழந்தாா். இது குறித்து மேல்மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Tags:    

Similar News