பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி.

பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-10 09:04 GMT

பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பொள்ளாச்சி: ஆனைமலையை அடுத்த ஆழியார் அணைக்கரையை ஒட்டி உள்ள பாலாற்றங்கரையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.இதனால் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மழை குறைந்ததன் காரணமாக வெள்ளநீர் வடிய துவங்கியது.தொடர்ந்து கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இடங்களை சுத்தமாக்கும் பணியை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.இதனை அடுத்து நாளை முதல் பக்தர்கள் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News