பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் !

ஒட்டன்சத்திரம் அருகே மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2024-03-11 06:23 GMT

நேர்த்திக்கடன்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை வலையபட்டியில் மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரிக்கு மறுநாள் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்தாண்டும் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.பக்தர்கள் தலையில் கோயில் பூசாரி தேங்காய் உடைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து ஏராளமான பக்தர் தலையில் தேங்காயை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.இதில் ஒரு சில பக்தர்களின் தலையில் ரத்தம் கொட்டியது. விழாவை காண தமிழகத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
Tags:    

Similar News