ஆனி மாத பிரதோஷ விழாவில் குவிந்த பக்தர்கள்

சிவகாசியில் ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2024-06-20 05:15 GMT

 சிவகாசியில் ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.  

சிவகாசியில் ஆனி மாத பிரதோஷ விழாவில் குவிந்த பக்தர்கள்... விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்று பகுதியிலிருக்கும் சிவன் ஆலயத்தில் ஆனி மாத பிரதோஷ விழா அதிவிமர்ச்சியாக கொண்டப்பட்டன.பக்தர்கள் கொண்டு வந்த காணிக்கை பொருளான இளநீர்,பால்,தயிர், மஞ்சள்,பன்னீர்,சந்தனம் மற்றும் வாசன திரவியங்களை கொண்டு நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் நந்தி பகவானுக்கு சந்தனகாப்பு வைத்து வெள்ளி கவசம் அணிந்து வண்ண, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.பிரதோஷ விழாவில் சிவகாசி மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த ஆண்,பெண் சிவன் பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வணங்கி சென்றனர்.
Tags:    

Similar News