இந்து அறநிலையத்துறையை கண்டித்து பக்தர்கள் முற்றுகை போராட்டம்

மயிலாடுதுறை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலக அதிகாரிகள் கோயில் திருவிழாவில் மைக்செட்டை ஆப் செய்து கோயில் விழாவிற்கு இடையூறு அளித்து கோயில் அர்ச்சகரை மிரட்டல் விடுத்ததை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்.

Update: 2024-04-24 08:56 GMT

போராட்டம்

மயிலாடுதுறை அருகே சித்தர்காடு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலய வாயிலில் உள்ள இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலக அதிகாரிகள் கோயில் திருவிழாவில் மைக்செட்டை ஆப் செய்து கோயில் விழாவிற்கு இடையூறு அளித்து கோயில் அர்ச்சகரை மிரட்டல் விடுத்ததை கண்டித்து ஸ்ரீ சம்பந்தர் உழவாரப்பணி மன்றம், பாஜக, இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விழா இறுதி நாளும் மைக் வைத்துக்கொள்ள அதிகாரிகள் அனுமதி அளித்தனர் அதிகாரிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் முற்றுகை போராட்டத்தை விலக்கிச் சென்றனர்.
Tags:    

Similar News