தி.மலையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-19 13:06 GMT
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.இந்த நிலையில் இன்று (19.05.2024) விடுமுறை தினம் என்பதால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். கோவில் வளாகத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தனர்.