சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த பெண்

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு காரிமங்கலம் பகுதியை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் சௌமியா வேட்புமனு தாக்கல் செய்தார்.

Update: 2024-03-28 05:45 GMT
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி காரிமங்கலம் பகுதியை சேர்ந்த சௌமியா என்ற இளம் பெண் சுயேட்சை வேட்பாளராக நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.அதேபோல தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அன்புமணி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஒரே பெயரில் இரண்டு பெண் வேட்பாளர்கள் வேட்பமனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News