கோவில் கும்பாபிஷேக விழாவை சிறப்பித்த தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர்

அரூர் காமாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி கலந்துகொண்டு சிறப்பித்தார்.

Update: 2024-06-14 12:35 GMT

இன்று 14.06.202 அரூர் காமாட்சி அம்மன் திருகோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி B.Com,B.L, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து விழாவை சிறப்பித்தார் நாடாளுமன்ற உறுப்பினருக்கு, அரூர் பேரூர் திமுக செயலாளர் முல்லைரவி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோட்டை காளிஅம்மன் கோயில் சென்ற அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.

நிகழ்வில் மாநில ஆதிதிராவிட நலக்குழு துணை செயலாளர் S.ராஜேந்திரன்,அரூர் பேரூராட்சி துணைத் தலைவர் சுர்யா .D.தனபால்,காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் M.V.T.கோபால்,காரிமங்கலம் மத்திய ஒன்றிய செயலாளர் இல.கிருஷ்ணன்,மாரண்டஅள்ளி பேரூராட்சி செயலாளர் தலைவர் MAவெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கலைவாணி,மற்றும் கழக நிர்வாகிகள் பெரும் திரளாக நிகழ்வில் உடனிருந்தனர்.

Tags:    

Similar News