திமுகவினர் தர்ணா போராட்டம்

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நுழைவாயில் தரையில் அமர்ந்து திமுகவினர் தர்ணா போராட்டம் செய்தனர்.

Update: 2024-04-09 07:55 GMT

 பொள்ளாச்சி.. ஏப்ரல்..09 மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை வேட்பாளர்களை ஆதரித்து பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.. இதை அடுத்து மேடை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது சாலையில் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது..

இந்நிலையில் திமுகவினர் அதிமுக பிரச்சார கூட்டத்திற்கு முறையாக அனுமதி வழங்கப்பட்ட இடத்தை தாண்டி பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையிலும் பள்ளிவாசல் அருகிலும் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை தடுப்புகள் கொண்டு தடுத்து நிறுத்தி உள்ளனர்.. மேலும் ரம்ஜான் பண்டிகை ஒட்டி இஸ்லாமியர்கள் அதிகம் நாளை பேர் தொழுகையில் ஈடுபடுவார்கள் என்று கூறி இதற்கு அனுமதி யார் அளித்தது என கூறி திமுகவினர் அதிமுக மீது புகார் அளிக்க சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளிக்க வந்தனர்..

ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலர் அங்கு இல்லாததால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதி அளித்தது யார், இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகை சமயத்தில் பள்ளிவாசல் அருகில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நுழைவாயில் அமைந்து திமுகவினர் தர்ணவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது..

Tags:    

Similar News