காமராஜர் சிலை மண்டப்பத்தை சேதப்படுத்தியவர் மிது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டம் !

நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் காமராஜர் சிலை மண்டப்பத்தை சேதப்படுத்தியவர் மிது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2024-07-09 07:05 GMT

தர்ணா போராட்டம்

நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் காமராஜர் சிலை மண்டப்பத்தை சேதப்படுத்தியவர் மிது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டம் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் காமராஜர் சிலை உள்ளது.சிலையை சுற்றி கூண்டு அமைக்கும் பணியின் போது சிலை அமைந்திருக்கும் மண்டபத்தில் சில பகுதிகள் சேதம் அடைந்துள்ளது.

இதனை அறிந்த காங்கிரஸ் கட்சியினர் கூண்டு அமைக்கும் போது காமராஜர் சிலை மண்டபத்தை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வட்டார நிர்வாகி ராஜாராமன் தலைமையில் கிராம கமிட்டி ஸ்டெல்லா சௌரிராஜன். ஓ.பி.சி அணி மாநில செயலாளர் சிவசங்கரன் உள்ளிட்ட நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த திருக்கண்ணபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விவேக்ரவிராஜ், திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.பேச்சுவார்த்தைகள் உடன்பாடு ஏற்பட்டு அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலந்து சென்றனர்.

Tags:    

Similar News