கோவில் திருவிழாவை முன்னிட்டு குளத்தை தூர்வாரும் பணி

நத்தம் ஸ்ரீமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் குளத்தில் துப்புரவு தூய்மை பணி நடைபெற்று வருகின்றது.

Update: 2024-02-14 12:13 GMT

கோவில் திருவிழாவை முன்னிட்டு குளத்தை தூர்வாரும் பணி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நத்தம் அருள் தரும் நத்தம் ஸ்ரீமாரியம்மன் கோவில் திருவிழாவை சிறப்பாக நடந்து வருகிறது. நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்ஷா உத்தரவின் பேரில் நத்தம் அம்மன் குளத்தில் குப்பைகளை சுத்தம் செய்து துப்புரவு தூய்மை பணி நடைபெற்று வருகின்றது. பல ஆண்டுகளுக்கு பின்பு குளம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் குளத்தில் இறங்கி குளிக்கக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் குளத்தில் இறங்கும் போது பாதுகாப்பாக இறங்கவும்,குழந்தைகள் மற்றும் முதியவர்களை பாதுகாத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News