திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தின் அவல நிலை

போதிய இடவசதி இல்லாததால் திருவெண்ணெய்நல்லூ பேரூராட்சி அலுவலகத்தில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால், மழை காரணமாக வீணாகக்கூடிய வாய்ப்புள்ளது.

Update: 2024-02-06 05:02 GMT

போதிய இடவசதி இல்லாததால் திருவெண்ணெய்நல்லூ பேரூராட்சி அலுவலகத்தில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால், மழை காரணமாக வீணாகக்கூடிய வாய்ப்புள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் போதிய கட்டிட வசதி இல்லை. இதனால் விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை வைக்க இடமில்லாமல் பேரூராட்சி அலுவலகம் முன்பு அடுக்கி வைத்துள்ளனர். இதன் காரணமாக பேரூராட்சி அலுவலகத்துக்கு அதிகாரிகள், பொதுமக்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் மழை பெய்யும் போது நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க ஒழுங்குமுறை மேம்படுத்தல் விற்பனைக்கூடத்தில் கூடுதல் கட்டிட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது அவசியம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News