திண்டுக்கல் : மில் வாட்ச்மேனை தாக்கிய 2 பேர் கைது

Update: 2023-12-03 11:59 GMT

இருவர் கைது 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் அருகே கொட்டபட்டியை சேர்ந்தவர் ரகு கார்த்திக் (வயது 40). இவர் அதே பகுதியில் ரைஸ் மில் வைத்து நடத்தி வருகிறார்.இங்கு சரவணன் (40) என்பவர் வாட்ச்மேனாக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் மில்லில் பணிபுரியும் சிவபெருமாள் (32) என்பவருக்கும்,ஆர்.வி நகரைச் சேர்ந்த குணசீலன்(23),அஜித் குமார் (21) ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் குணசீலன்,அஜித்குமார் ஆகிய 2 பேரும் சிவபெருமாளை சந்திப்பதற்காக மில்லுக்கு சென்றுள்ளனர்.அங்கு வாட்ச்மேன் சரவணன் அவர்கள் 2 பேரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 2 பேரும் வாட்ச் மேன் சரவணனை தாக்கியதாக கூறப்படுகிறது.இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் பேரில் தாலுகா போலீசார் இருவரையும்  கைது செய்தனர்.
Tags:    

Similar News