பழங்குடியின மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-22 13:29 GMT
ஆட்சியர் பூங்கோடி
2024 - 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை பிஎச்டி(ph.d), முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார். உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் https://overseas .tribal.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்.