திண்டுக்கல் : மக்கள் குறைதீர் கூட்டம்
Update: 2023-12-11 17:33 GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து 294 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். உடன் அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.