அணைகளில் உபரி நீர் வெளியேற்றம்; விவசாயிகள் தீவிர ஆர்வம்

நெல்லையில் பிரதான அணைகளில் நீர் திறக்கப்படுவதை முன்னிட்டு, விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைச்சல் பணியை தீவிரபடுத்திள்ளனர்.

Update: 2024-05-27 08:55 GMT

நெல்லையில் பிரதான அணைகளில் நீர் திறக்கப்படுவதை முன்னிட்டு, விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைச்சல் பணியை தீவிரபடுத்திள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று (மே 27) காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக 204.75 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அதைப்போல் மணிமுத்தாறு அணையில் இருந்து 345 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இவ்வாறு பிரதான அணைகளில் நீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் தங்களது நிலங்களில் பணியை தீவிரபடுத்திள்ளனர்.



Tags:    

Similar News