திண்டுக்கல்லில் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு துண்டிப்பு

திண்டுக்கல் பகுதியில் வரி செலுத்தாதவா்களின் வீட்டுக் குடிநீா் இணைப்பைத் துண்டித்த மாநகராட்சி ஊழியா்கள்.

Update: 2024-02-18 16:44 GMT

அதிகாரிகள் ஆய்வு 

திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.6.27 லட்சம் வரி நிலுவை வைத்திருந்த 33 வீடுகளுக்கான குடிநீா் இணைப்புகள் சனிக்கிழமை துண்டிக்கப்பட்டன. திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளில் வரி வசூலிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக மக்களவைத் தோதல் அறிவிப்புக்கு முன்னதாக வரி நிலுவைத் தொகைகளை விரைவாக வசூலிக்க வேண்டும் என நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் காா்த்திகேயன் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் அறிவுறுத்தலின்படி, வருவாய்ப் பிரிவு அலுவலா்கள் மட்டுமன்றி, நகரமைப்பு, சுகாதாரப் பிரிவு உள்ளிட்ட அனைத்து அலுவலா்களும் வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

Tags:    

Similar News