சென்னை தூய்மை பணிக்கு தூய்மை பணியாளர்கள் அனுப்பி வைப்பு

சென்னை மிக்ஜாம் புயல் தூய்மை பணிக்கு திருச்செங்கோடு, ராசிபுரம் தூய்மை பணியாளர்கள் அனுப்பி வைத்தனா்

Update: 2023-12-05 04:53 GMT

சென்னை மிக்ஜாம் புயல் தூய்மை பணிக்கு திருச்செங்கோடு ராசிபுரம் தூய்மை பணியாளர்கள் அனுப்பி வைத்தனா்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னையில் வரலாறு காணாத கன மழை பெய்து சென்னை தத்தளித்துக் கொண்டுள்ள சூழலில் மாநிலம் முழுதும் உள்ள நகராட்சிகளில் இருந்து சென்னை பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள துப்புரவு பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்,இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 15 பேர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஒருவரும் ராசிபுரம் நகராட்சியில் இருந்து துப்புரவு பணியாளர்கள் 10 பேர் மற்றும் ஆய்வாளர் ஒருவரும் நகராட்சி அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர், இவர்களை திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் மற்றும் ராசிபுரம் நகராட்சி பொறுப்பு ஆணையாளர் சேகர் அனுப்பி வைத்தார், புதிய இடத்தில் துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



Tags:    

Similar News