முன் விரோதம் காரணமாக தகராறு - 7 பேர் கைது !

மணியனூர் அருகே முன் விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-03-20 06:31 GMT

 7 பேர் கைது

சேலம் மணியனூரைச் சேர்ந்தவர் பூபதி. இவருக்கும், மனோ என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பூபதி, அவரது நண்பர்களுடன் மணியனூர் சுடுகாடு அருகே பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மனோ தரப்பினருக்கும், பூபதி தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இரு தரப்பினரும் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இருதரப்பைச் சேர்ந்த மனோ (19), செல்வராஜ் (27), கார்த்திக் (24), தியாகராஜன் (23), பூபதி (22), பிரசாந்த் (23), தாமோதரன் (26) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News