பொதுப் பாதையில் வேலி அமைத்த தகராறில் இருவர் காயம் !
பொதுப் பாதையில் வேலி அமைத்ததால் இருதரப்பினர் இடையே தகராறு. இருவர் காயம். நான்கு பேர் மீது வழக்கு பதிவு.
Update: 2024-03-15 12:03 GMT
பொதுப் பாதையில் வேலி அமைத்ததால் இருதரப்பினர் இடையே தகராறு. இருவர் காயம். நான்கு பேர் மீது வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட, ஆண்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி வயது 65. இவரது மகன் வீராசாமி வயது 35. இவர்கள் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மேகநாதன் வயது 37, சுப்பிரமணி வயது 45,செல்வராஜ் வயது 53, சக்திவேல் வயது 54 ஆகியோர் கருப்பசாமி வீட்டிற்கு செல்லும் பாதையில் உள்ள பொதுப் பாதையை இடைமறித்து மார்ச் 11ஆம் தேதி காலை 10 மணி அளவில், கம்பி வேலி அமைத்தனர். வீட்டுக்கு செல்லும் பாதையை மறித்து, கம்பி வேலி அமைத்ததால், கருப்பசாமி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. அப்போது, அங்கு வந்த வீராசாமியும் இந்த வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஒரு கட்டத்தில், இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பாக மாறியதில் கருப்பசாமிக்கும், வீராசாமிக்கும் உள் காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவம் தொடர்பாக கருப்பசாமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்ட மேகநாதன், சுப்பிரமணி, செல்வராஜ், சக்திவேல் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.