விழுப்புரத்தில் நாளை குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்

தேசிய குடற் புழு நீக்க நாளையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுவதாக ஆட்சியர் பழனி தெரிவித்தார்.

Update: 2024-02-08 06:00 GMT

ஆட்சியர் பழனி 

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தேசிய குடற் புழு நீக்க நாளையொட்டி 1 வயது குழந்தை முதல் 19 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்ட சோல்) அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படுகிறது, அன்று விடுபட்ட குழந்தைகளுக்கு 16-ந் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் வழங்கப்படும். மாவட்டத்தில் 1,781 அங்கன்வாடி மையங்களிலும், 1,794 பள்ளிகளிலும் படிக்கும் 1 முதல் 19 வயதுக்குட் பட்ட 6 லட்சத்து 58 ஆயிரத்தி 892 பேருக்கும், 20 முதல் 30 வய துக்குட்பட்ட 1 லட்சத்து 36 ஆயிரத்தி 829 பெண்களுக்கும் என மொத்தம் 7 லட்சத்து 95 ஆயிரத்தி 721 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்ட்சோல்) வழங்கப்படவுள்ளது.

மேலும் பள்ளி செல்லா குழந்தைகளுக்கும் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். இப்பணியில் பொது சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையைச் சேர்ந்த பணியாளர் கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி மைய பணியாளர்கள், பெற்றோர்களிடம் இத்தகவலை தெரிவித்து அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்வதற்கு ஊக்குவிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News