தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கல்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கினார்.

Update: 2023-12-22 16:42 GMT

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு 

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சமூக பொறுப்பு நிதியின் (CSR) கீழ் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி . கிருஷ்ணன் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.

வெள்ள நிவாரண முகாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கி சார்பில் உணவுப் பொட்டலங்கள், தண்ணீர், பால், மளிகைப் பொருட்கள், படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள் வழங்கப்பட்டன. இந்த முகாம்களின் மூலமாக சுமார் 6000 நபர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் சீவலப்பேரி, கீழநத்தம் கிராமம், பர்பநாதபுரம் கிராமம், மேல வீரராகவபுரம், சிஎன் கிராமம், தூத்துக்குடி மாவட்டத்தில் மாதா நகர், மாநகராட்சி அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகள், சோட்டையன் தோப்பு, முத்தம்மாள் காலனி, ஜோதி பாசு நகர், மாப்பிளையூரணி ஆகிய பகுதிகளில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News