மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 22 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் வழங்கினர்

Update: 2023-12-25 17:04 GMT

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 22 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் வழங்கினர்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்ட மக்களுக்கு உதவிடும் பொருட்டு சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர்களின் பங்களிப்புடன் 50 டன் அளவிலான அரிசி, பருப்பு வகைகள், உப்பு, சீனி கோதுமை மாவு, ரவை, மசாலா தூள் மற்றும் இதர பொருட்கள் என மொத்தம் சுமார் ரூ. 22 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவுறுத்தலின்படி மேற்கண்ட மாவட்ட மக்களுக்கு கனரக வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது
Tags:    

Similar News