அரசு மேல்நிலைப் பள்ளியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தென்காசி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-19 09:24 GMT
ஆட்சியர் ஆய்வு
தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுரண்டை சிவகுருநாதபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அவர்கள் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி முறையினையும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தை கேட்டறிந்து. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் யாராலமான அரசு ஊழியர்களும் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.