திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான குழுக்கூட்டம்!

வாக்குச்சாவடி மையங்களில் வசதி ஏற்படுத்துதல் தொடர்பாக மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-29 06:18 GMT

குழுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு மாற்றுதிறனாளி வாக்காளர்கள் எளிதில் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி மையங்களில் வசதி ஏற்படுத்துதல் தொடர்பாக மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News