பெரம்பலூரில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி

மாவட்ட அளவில் டேக்வாண்டோ போட்டி பெரம்பலூரில் நடைபெற்றது.

Update: 2023-11-21 15:19 GMT

மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளியில், மாவட்ட அளவிலான டேக்வாண்டோ ஒரு ஒரு நாள் போட்டி, நவம்பர் 21ஆம் தேதி இன்று நடைபெற்றது பள்ளியின் தாளாளர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்த போட்டியில், 14, 17, 19, வயது உடையோர்க்கான பிரிவில், 34 வகை எடை பிரிவில் மாணவர்களுக்கும், 35 வகை எடை பிரிவில் மாணவிகளுக்கும் இப்போட்டி நடத்தப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 350 பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று விளையாடினார்கள் இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடம் பெரும் பள்ளி மாணவ மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி உடையவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் டேக்வாண்டோ பயிற்சியாளர் பரணி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன், உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட அளவில், தேர்வு செய்யப்படும் 69 மாணவ மாணவிகள் மாநில அளவிளான போட்டிக்கு தகுதி உடையவராக அனுப்பி வைக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,

Tags:    

Similar News