மதுரையில் பாஜக ஓபிசி அணி மாவட்ட செயலாளர் படுகொலை

மதுரையில் அதிகாலையில் பைக்கில்  சென்றுகொண்டிருந்த பாஜக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-02-15 10:05 GMT

 ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கீழ வல்லானந்தபுரம் பகுதியை சேர்ந்தவரான சக்திவேல் (35) இவர் மதுரை மாநகர் அண்ணாநகர் பகுதியில் தேவர் குறிஞ்சிநகர் பகுதியில் வசித்துவருகிறார்.

இவர் மதுரை மாவட்ட பாஜக OBC அணியின் மாவட்ட செயலாளராக பதவி வகித்துவருகிறார். மேலும் இவர் அதே பகுதியில் பைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டுவருகிறார். 

இந்த நிலையில் இன்று காலை சக்திவேல் வண்டியூர் டோல்கேட் அருகே பைக்கில்  சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 3க்கும் மேற்பட்டோர் விரட்டி ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடினர். இதையடுத்து அவரது உடல் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல்துறையினர் சக்திவேலின் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.  இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அண்ணாநகர் காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணை நடத்தினர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சரக்கு வாகனம் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சக்திவேலுடன் ஒரு நபர் பிரச்சனையில் ஈடுபட்டுவந்துள்ளது தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News