இரவு ரோந்து பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு!
தூத்துக்குடியில் காவல்துறையினரின் இரவு ரோந்து பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்.
Update: 2024-07-09 05:08 GMT
தூத்துக்குடியில் காவல்துறையினரின் இரவு ரோந்து பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார். தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் நேற்று இரவு தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை ஜங்ஷன் உட்பட பல பகுதிகளுக்கு நேரில் சென்று காவல் துறையினரின் இரவு ரோந்து பணிகளை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர்பிரேம் ஆனந்த், உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.