பாஜக மாநில துணைத்தலைவர் ராமலிங்கத்தின் மீது திமுகவினர் புகார்

கெங்கவல்லி அருகே உலிபுரத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரையும், இஸ்லாமியர்களையும் இழிவாக பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் ராமலிங்கத்தின் மீது திமுகவினர் ஆத்தூர் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

Update: 2024-06-20 03:56 GMT
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உலிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு பாஜக கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது ,இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவின் மாநில துணைத்தலைவர் கே பி. ராமலிங்கம் பேசும் பொழுது தமிழக முதல்வரையும் இஸ்லாமியர்களையும் இழிவுபடுத்தும் விதமாக பேசிதாக கூறப்படுகிறது இதனைத் தொடர்ந்து நேற்று ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஸ்டாலின்  தலைமையில் நகர மன்ற திமுக உறுப்பினர் பிரபு,  இளங்கோவன், சண்முகம், மணி ,சக்திவேல் உள்ளிட்ட திமுகவினர் ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமாரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர் அதில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலினையும் இஸ்லாமியர்களையும் பாஜக பொதுக் கூட்டத்தில் தரக்குறைவாகவும் இழிவு படுத்தும் விதமாக பேசிய பாஜகவின் மாநில துணைத்தலைவர் டாக்டர் கேபி. ராமலிங்கத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.
Tags:    

Similar News