வடலூரில் நிதிநிலை அறிக்கை விளக்க பொது கூட்டம்
வடலூரில் திமுக சார்பில் நடந்த எல்லோருக்கும் எல்லாம் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.;
Update: 2024-03-05 03:10 GMT
அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க மாபெரும் பொது கூட்டம் நேற்று இரவு குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.