இந்திய ஜனநாயகத்திற்கு பேராபத்து வரும் போது முதல் குரல் கொடுக்கும் கட்சி திமுக தான் -அன்பில் மகேஷ்

இந்திய ஜனநாயகத்திற்கு பேராபத்து வரும் போது முதல் குரல் கொடுக்கும் கட்சி திமுக தான் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி பேச்சு.

Update: 2024-02-17 09:20 GMT
உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் , பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.இதில் தமிழக அமைச்சர்கள் முத்துசாமி , மு.பெ.சாமிநாதன் , கயல்விழி செல்வராஜ் மற்றும் சிறப்பு அழைப்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். சிறப்புரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , பா.ஜ.க தமிழகத்தை வஞ்சித்த போது அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தங்கள் பதவியை காப்பாற்றினால் போதும் என அமைதியாக இருந்தனர். நாட்டின் 3 வது பெரிய கட்சி திமுக தான் என்றும் , இந்திய ஜனநாயகத்திற்கு பேராபத்து வரும் போது எல்லாம் முதல் குரல் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு என்றும் , முதல் குரல் கொடுக்கும் கட்சி திமுக தான் என்றார். எதிர்ப்பு தெரிவித்தால் மத்திய அரசு கையில் எடுக்கும் ஆயுதம் வருமான வரித்துறை , அமலாக்கத்துறை , சிபிஜ சோதனை என்றார். ஜெயலலிதா இருந்த போது பல திட்டங்கள் தமிழகத்திற்கு வரவில்லை , அதன் பிறகு மாநில உரிமைகளை இழந்தோம் என்றார்
Tags:    

Similar News