தென்காசியில் அங்கன்வாடி மையத்திற்கு சேர் வழங்கல் நிகழ்ச்சி

முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம், பாண்டியாபுரம் அங்கன்வாடி மையத்திற்கு திமுகவினர் சேர் வழங்கினர்.

Update: 2024-03-02 07:15 GMT
தென்காசியில் அங்கன்வாடி மையத்திற்கு சேர் வழங்கல் நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே பாண்டியாபுரம் அங்கன்வாடி மையத்தில் திமுக மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் தமிழக முதல்வர்மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அங்கன்வாடி குழந்தைகளுக்கு சேர்கள் மற்றும் இனிப்பு பிஸ்கட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ்.எல். பிரேம்குமார் முன்னிலையில் மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் சித்ராதேவி. ஊராட்சி மன்ற உறுப்பினர் லதா ஐயப்பன் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News