நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று (27.05.2024 திங்கட்கிழமை) நாமக்கல் மோகனூர் சாலை, முல்லை நகரில் உள்ள நாமக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் பேராசிரியர் அரங்கத்தில் நடைபெற்றது.

Update: 2024-05-27 14:44 GMT

திமுக கூட்டம்

நாமக்கல் மாவட்ட திமுக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான K.R.N. இராஜேஸ்குமார் MP சிறப்புரை ஆற்றிப் பேசினார். அப்போது, முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்,வருகிற ஜூன் 3ம் தேதி மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு மற்றும் பிறந்த நாளை, நாமக்கல் கிழக்கு மாவட்டம் முழுவதும், நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சி தோறும், கட்சிக்கொடி ஏற்றி வைத்து, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, சிறப்பாக கொண்டாடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழாவில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பொதுமக்கள், முதியோர், ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கும் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான மருத்துவ உதவிகள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுகள் வழங்க வேண்டும் என்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Tags:    

Similar News