திமுக இளைஞரணி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னதானம்

கலைஞர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற அன்னதானம் வழங்கும் விழாவில் எம்.எல்.ஏ வெங்கடேசன் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார்

Update: 2024-06-09 05:24 GMT

அன்னதானம் வழங்கல்

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் காதக்கிணறு ஊராட்சி கடச்சநேந்தல் கிராமத்தில் உள்ள இம்மானுவேல் மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் திமுக இளைஞரணி சார்பில் முத்தமிழ் அறிஞர், முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற அன்னதானம் வழங்கும் விழாவில் எம்.எல்.ஏ வெங்கடேசன் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார்.

ஏற்பாடுகளை இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் இளங்கோ செய்திருந்தார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் வெற்றிசெல்வன், குமரேசன், வைகை மருது, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கலாநிதி, ஒன்றிய அமைப்பாளர் அன்பரசபாண்டி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆதிசங்கர், மாவட்ட துணை அமைப்பாளர் கேசவன், தொண்டரணி துணை அமைப்பாளர் அன்புமணி, நிர்வாகிகள் பொண்மணிகண்டன், உள்ளிட்ட திமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News