இரட்டை இலை பற்றி கவலைப்பட வேண்டாம்- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

இரட்டை இலை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Update: 2024-03-27 13:40 GMT

 இரட்டை இலை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 

ஈரோடு நாடாளுமன்ற அதிமுக தேர்தல் பணிமனை முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் , தங்கமணி , வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் ஆகியோர் ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் திறந்து வைத்தனர் .

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈரோடு நாடாளுமன்ற பொறுப்பாளருமான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் , ஈரோடு மாவட்டம் சேவல் , புறா இருக்கும் போது வெற்றி கொடுத்த மாவட்டம் என்றும் மக்கள் நலன் கருதி மக்களுக்கு நல்லது செய்யும் அதிமுகவிற்கு மக்கள் அரணாக இருந்து அதிமுகவிற்கு வெற்றி வாகை சூட உள்ளதாகவும் , அதிமுக வெற்றி என்பது நிர்ணியக்கப்பட்டு ஒன்று தான் , லட்ச வாக்குகள் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றார். இரட்டை இலை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கே இரட்டை இலை சின்னம் என்றார்.ஓ.பி.எஸ் ராமநாதபுரத்தில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு தேர்தல் களத்தில் யார் வேண்மென்றாலும் நிற்கலாம் என்றார்.

Tags:    

Similar News