இரட்டை ரயில் பாதை சோதனை ஓட்டம்

நாகர்கோவில் ஆரல்வாய்மொழி ரயில் சோதனை ஓட்டம் இன்று நடக்கிறது.

Update: 2024-03-26 05:44 GMT

ரயில் பாதை சோதனை ஓட்டம் 

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-  தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டத்திற்குட்பட்ட நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் முதல் ஆரல்வாய்மொழி இரட்டை  அகலப்பாதை பணிகள் முடிவடைந்துள்ளன. இதைத்தொடர்ந்து இன்று (26-ம் தேதி)  மதியம் 2:45 மணிக்கு ஆரல்வாய் மொழியில் இருந்து தொடங்கி 3 மணிக்குள் அதிவிரைவு ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெறும். இதில் ஒரு எஞ்சின் மற்றும் அதனுடன் மூன்று பெட்டிகள் இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த சோதனை ஓட்டமானது பெங்களூர் ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் மேற்பார்வையில் நடைபெறும். சோதனை ஓட்டம் நடைபெறும்  நேரத்தில் ரயில்வே பணியாளர்களை தவிர பொதுமக்கள் அந்த தண்டவாளப் பகுதிகளின்  அருகில் செல்ல வேண்டாம். என அந்த செய்தி குறிப்பில கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News