தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா அழைப்பு !
கெங்கவல்லி பேரூர் கழக திராவிட முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோரது பிறந்தநாள் விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.
Update: 2024-02-29 09:24 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி பேரூர் கழக நாளை நமது திராவிட முதலமைச்சர் மாண்புமிகு தளபதியார் பிறந்தநாளை முன்னிட்டு நமது பேரூரில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோரது திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கியும், தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டியுடன் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற இருப்பதால் நமது பேரூருக்கு உட்பட்ட வார்டு கழக செயலாளர்கள் ,கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், சார்பணி தோழர்கள் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு பேரூர் கழக செயலாளர் சு. பாலமுருகன் விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.