கொண்டையம்பள்ளிஅரசு பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

கொண்டையம்பள்ளிஅரசு பள்ளியில்₹8 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது

Update: 2024-01-27 16:49 GMT
திறப்பு விழா 

சேலம் மாவட்டம்  தம்மம்பட்டி அடுத்த கொண்டையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், கெங்கவல்லி ஒன்றிய குழு உறுப்பினர் நிதியில் ஒன்றிய குழு உறுப்பினர் முருகேசன், ! லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை அமைக்க ஏற்பாடு செய்தார். அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தன் தலைமை வகித்தார். ஆசிரியர் மதிவாணன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் மதியழகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், துரை ரவி, மாவட்ட பிரதிநிதிகள் சுப்பிரமணி, வழக்கறிஞர் ரமேஷ், ராமலிங்கம், பாலு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் முத்துசாமி, பொன்னர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய குழு உறுப்பினர் முருகேசன். குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை திறந்துவைத்தார். விழாவில் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News